
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை மேற்கொள்ளகூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாள நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக, செய்தியாளர்கள் பான் கீ மூனின் பேச்சாளரரிடம் வினவியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியை பேணுவது நாட்டின் சமாதானத்தி;ற்கும் இணக்கப்பாட்டுக்கும் அவசியமானது எனக்குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் சினமூட்டும்; செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.














