Friday, December 8, 2023
World

இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – தாக்கம் என்ன?


டெல் அவிவ்: இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ராணுவத்தில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. வான்வழித் தாக்குதலின்போது இலக்குகளை தேர்வு செய்தல், போருக்கான தளவாடங்களை முறைப்படுத்துதல் போன்ற பணிகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுதங்கள் வழங்கி வருவதாக இஸ்ரேல் நீண்ட காலமாகவே குற்றம் சுமத்தி வருகிறது. இதன் காரணமாகவும் இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில், சமீப காலமாக இஸ்ரேல் – ஈரான் மோதல் வலுத்து வருகிறது. இதனையொட்டி பாதுகாப்புப் படையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை இஸ்ரேல் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *