Saturday, September 23, 2023
World

எல்லா திசைகளிலும் உக்ரைன் படைகள் முன்னிலையில் உள்ளன: அதிபர் ஜெலன்ஸ்கி


மாஸ்கோ: ரஷ்யாவுடனான போரில் எல்லா திசைகளிலும் உக்ரைன் படைகள் முன்னிலையில் உள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு முனைகளில் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் உக்ரைன் படைகளை அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து வருகிறார். டொனஸ்க் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர், பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, “இது மகிழ்ச்சியான நாள். தோழர்களுக்கு இது போன்ற பல நாட்கள் வர வாழ்த்துகிறேன். இது ஒரு வேலை மிகுந்த நாள். நிறைய உணர்வுப்பூர்வ உணர்ச்சிகள் நிரம்பி உள்ளன. எங்கள் போர் வீரர்களுக்கு விருது வழங்குவதற்கும், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவதற்கும், அவர்களுடன் கை குலுக்குவதற்கும் நான் பெருமைப்படுகிறேன்” என்று மகிழ்ச்சியாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *